சுஜித்தின் சகோதரர் ஜெயபாலன் கைது
நெல்லை:
நெல்லையில் கவின் கொலை வழக்கு (ஆணவக் கொலை) தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி (CBCID) காவல்துறைக்கு வழக்கு மாற்றப்பட்ட பின்னர், இதுவரை சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவத்தின் தொடர்ச்சியாக, சுர்ஜித்தின் சகோதரரும், சித்தி மகனுமான ஜெயபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜெயபாலன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கவின் கொலை வழக்கு மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் யாரும் தப்பிக்கக்கூடாது என தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.