திருநெல்வேலி, ஆக.9: தேவர்குளம் அருகே சொத்துத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டதில் 6 பேர் காயமடைந்தனர். இது குறித்து தேவர்குளம் போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேவர்குளம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா(78). இவருடைய மனைவி சண்முகத்தாய் (75). இவர்களுடைய மகன் செல்லத்துரை (48), மகள்கள் உஷா(42), உமாராணி (38). இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக தந்தை செல்லையாவுக்கும், மகன் செல்லத்துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில் செல்லையா, அவருடைய மனைவி சண்முகத்தாய், மகள்கள் உமாராணி, உஷா ஆகியோர் காயம் அடைந்தனர் .அதே போல் செல்லதுரை, அவருடைய 17 வயது மகன் ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்த 6 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து தேவர்குளம் போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.