திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையருக்கு ‘நல்ல ஆளுமை’ விருது

திருநெல்வேலி:
உள்துறை மேம்பாட்டு திட்டங்களில் சிறப்பான பணியை ஆற்றியதற்காக, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர் பிரசன்ன குமார் IPS அவர்களுக்கு, தமிழக முதல்வர் வழங்கும் ‘நல்ல ஆளுமை விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் அரசு துறைகளில் புதிய உத்திகளை கையாண்டு, பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கிய அதிகாரிகள் மற்றும் துறைசார் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த விருது, அதிகாரிகளின் சேவைத்திறனை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, ஊரக மேம்பாட்டு திட்டங்களுக்கான காவல் துறையின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, டாக்டர் பிரசன்ன குமார் IPS அவர்கள் இந்த விருதிற்குத் தேர்வாகியுள்ளார்.

முதல்வர் தலைமையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *