பொறியாளர் தின விழாவை முன்னிட்டு திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் முஸ்லிம் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஆனந்தராஜ் உபகரணங்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை லீனு வரவேற்புரை ஆற்றினார். சங்க செயலாளர் எட்வின் சாமுவேல், பொருளாளர் வர்கீஸ், ஒருங்கிணைப்பாளர் சுந்தர், துணைத் தலைவர் முருகப்பெருமாள், துணைச் செயலாளர் லிங்கராஜ், முன்னாள் பொருளாளர் ராபின், நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேல், பேரூராட்சி கவுன்சிலர் நடேஸ்அரவிந்த், திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் நஸ்ருதீன் ஆலிமா மைதீன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
இறுதியில் உதவி ஆசிரியர் மாலதி நன்றி உரையாற்றினார்
“பொறியாளர் தினத்தில் சமூகப் பொறுப்பு: திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் மாணவர்களுக்கு உதவி