பள்ளி மாணவர்களிடையே மோதல் – ஒருவர் காயம், திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பு

 

திருநெல்வேலி, செப்டம்பர் 25, 2025:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே, பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதலில் ஒருவருக்கு அரிவாளால் வெட்டு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அரசு உதவி பெறும் மேல்நிலையப்பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னை தீவிரமடைந்ததால், எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இடையே சண்டை வெடித்தது. இதில் ஒருவருக்கு அரிவாளால் காயம் ஏற்பட்டுள்ளது.

 

காயமடைந்த மாணவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *