டிடிஎஃப் வாசன் – 10 ஆண்டு ஓட்டுநர் உரிமை ரத்து; மேல்முறையீடு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

 

பிரபல யூடியூபர் மற்றும் பைக் ரைடர் ‘டிடிஎஃப் வாசன்’ 2023 ஆம் ஆண்டு ஆபத்தான பைக் ஸ்டன்ட் மற்றும் அலட்சியமான ஓட்டுநர் பழக்கத்தால் சமூகத்தில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, காவல்துறை பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் போக்குவரத்து அதிகாரிகள் அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்தனர். இதனை ரத்து செய்யக் கோரி வாசன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இன்று (12 ஆகஸ்ட் 2025) சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. வழக்கின் போது, அவர் மீது முன்பு பதிவு செய்யப்பட்ட பல்வேறு ரத்துசெய்யப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் வரை ரத்து செய்யும் போக்குவரத்து துறையின் தீர்ப்பு நீடித்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *