நெல்லை பாளையங்கோட்டையில் அமலாக்கத்துறை ரைடு

பாளையங்கோட்டை (நெல்லை): பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சிவசுப்பிரமணியன் வீட்டில் இன்று (செப். 9) மதியம் அமலாக்கத்துறை (Enforcement Directorate) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஓய்வு பெற்ற பணியாளரான சிவசுப்பிரமணியன் மீது நிதி தொடர்பான சில முறைகேடுகள் மற்றும் ஆவணங்கள் குறித்த சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதியம் ஒரு மணியளவில் தொடங்கிய இந்த சோதனை, தொடர்ந்து 5 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் சோதனை நடைபெறும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய பாதுகாப்புப் படையினர் (CRPF) அதிக அளவில் குவிக்கப்பட்டு, சுற்றுவட்டாரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தியாகராஜநகர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

சோதனை தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்னும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

👉 இந்தச் சம்பவம் குறித்து விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *